Friday, January 24, 2020

எல்லாம் நன்மைக்கே!

மன்னர், அமைச்சர் குழுவினர் எல்லோரும்
ஒன்றாக வேட்டைக்குச் சென்றனர்! மன்னருக்கு
மண்டையில்  முள்கிழித்து ரத்தம் வழிந்தது!
அந்த  அமைச்சரோ எல்லாமே நன்மைக்கே
என்றார்! மன்னர் சிறைப்படுத்தி வைத்துவிட்டார்!
கொஞ்சதூரம் சென்றதும்  காட்டுவாசிக் கூட்டமோ
மன்னரைப் பார்த்து விருந்து கிடைத்தது
மன்னரைத் தின்னலாம் என்றான் தலைவனங்கே!
மன்னருக்குக் காயத்தைக் காட்டினான் காட்டுவாசி!
என்ன இருந்தாலும் "ஊனமான மன்னனை
சாப்பிடக் கூடாது" என்று விடுவித்தான்,!
காயமும் நன்மைக்கே! ஆகா உணர்த்திய
அந்த அமைச்சரை மன்னர் விடுவித்தார்!
என்ன நடந்தாலும் நன்மைக்கே என்றுநாம்
எண்ணவேண்டும் வாழ்க்கையில் தான்.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home