Thursday, February 20, 2020

பென்னர் நண்பர்கள் சங்கமம்!

22.02.2020 மதுரை ஜெர்மானஸ் ,காளவாசல்

நன்றி: ரமணி-- லிங்கராஜ்

தேரை இழுத்து நிலைக்குக் கொணர்தல்போல்
நீரிருவர் அல்லும் பகலும் உழைப்பதால்
தேரை நகர்த்தி இழுப்பதால் சாதனையை
ஊர்மெச்சும் என்றும் உணர்ந்து.

நட்பே வலிமை!

பென்னர் நிறுவனம் ஆலமரம்
நிழலில் எத்தனைக் குடும்பங்கள்!

ஒன்றாய்ச் சேர்ந்தே வாழ்ந்திருந்தோம்
குடும்ப உணர்வில் தழைத்திருந்தோம்

உரிமைக் காக குரல்கொடுத்தோம்
உறவுக் காக  கைகொடுத்தோம்

சுவரிருந் தால்தான் சித்திரத்தை
வரைய முடியும் உணர்ந்திருந்தோம்

உழைத்தவர் இங்கே ஆயிரந்தான்
பிழைத்தவர் இங்கே ஆயிரந்தான்

அலைகள் தோன்றி மறைவதைப்போல்
ஊழியர் வந்தார் சென்றார்கள்!

காலம் உருட்டிய காய்களாக
காலம் எங்களை உருட்டியதே

கூடுகள் விட்டே பறவைகள்
பறப்பதைப் போல பறந்துவிட்டோம்

இன்றும் நட்போ தொடர்கிறது
பென்னர் நட்பு மணக்கிறது

ஆண்டுகள் இங்கே சென்றாலும்
நாங்கள் தொடர்பைத் தொடர்கின்றோம்

பிரிந்த போது இருந்தமுகம்
இன்றோ எங்களுக் கில்லையே

அன்பும் நட்பும் மாறவில்லை
பென்னர் வாழ்வை மறக்கவில்லை

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல
கூடிப் பேச முனைந்திடுவோம்

ரமணி லிங்கா வெங்கடேஷ்தான்
இந்த வெற்றிக்கு வித்திட்டார்

வாழ்க வாழ்க பென்னர்தான்
வாழ்க வாழ்க நட்புதான்!

இருந்தார் என்ற வரம்புக்குள்
எத்தனை பேர்தான் சென்றுவிட்டார்

இங்கே இருக்கும் நாமெல்லாம்
அவரை வணங்கி வாழ்ந்திருப்போம்!

மதுரை நகரை வணங்கிடுவோம்!
ஏக்கத் தோடு பிரிந்திடுவோம்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home