Wednesday, February 12, 2020


குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

கலைஞர் உரை:

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

புலனடக்கம்!

வாய்மூடி கண்மூடி கேட்கும் செவிமூடி
ஊர்ந்துவந்து தூண்டும் மணம்நாடா மூக்குமூடி
பார்ப்பதற் கெல்லாம் அலையாத மெய்மூடி
வாழ்ந்தால் மனிதன் மனிதம்  தழைத்திருக்க
வாழ்வாங்கு வாழ்ந்திருப்பான்  பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home