Sunday, February 02, 2020

பிரசாந்த் மருத்துவமனை அனுபவம்!

தாயுமானேன்!

29.01.20--01.02.20

அறுவை சிகிச்சை முடித்தே வசந்தா
அறைக்குளே வந்தாள்  படுக்கவைத்துச் சென்றார்!
நினைவு திரும்பாமல் இங்கே மயக்கம்
அணைக்கப் படுத்திருந்தாள் பார்.

வசந்தா விழித்தாள்! அழைத்தாள் அருகில்!
நடந்துசென்றேன் காப்பி  குடிச்சாச்சா என்றாள்!
மயக்கப் பிடியில் இருந்தாலும் அன்பைச்
சுரந்ததைக் கண்டேன் நெகிழ்ந்து.

மனைவி எனக்குக் குழந்தையான கோலம்!
கணவன் மனைவிக்குத் தாயான கோலம்!
அனைத்துமே வாழ்வில் இயல்பாய் நடக்கும்!
மனைமாட்சி ஆணுக்கும் தான்.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home