Tuesday, February 25, 2020

அருள்தாஸ் உன்பிரிவால்
நாங்கள்
ஏக்கத்தின் பிடியில்!

மதுரை
பென்னர்!
பழுத்த மரத்தில்
கூடுகட்டி வாழ்ந்தன
பறவைகள்!

திடீரென்று
பருவ மாற்றத்தால்
பறவைகள் கலைந்து
சென்றன!

எங்கெங்கோ சென்று
வாழ்ந்து வருகின்றன!

பல ஆண்டுகள் ஓடிவிட்டாலும்
தொடர்பு வானம்
அப்படியே இருந்தது!

மீண்டும்
2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி 22 ஆம் நாள்
பறவைகள் சந்தித்தன!

சில பறவைகளைக் காணவில்லை!
இயற்கையுடன் கலந்துவிட்டன!

அருள்தாஸ் என்ற பறவை
மதுரையிலேயே இருந்தும்
வரமுடியாத
நோய்த்தாக்கம்!

வாய்ப்பிருந்தவர்கள்
பார்த்தனர்!

எத்தனை பறவைகள்
நிரந்தரமாய்
மறைந்துவிட்டன!

இதோ! இன்று!
அருள்தாஸ்!
மேலும் ஒரு பறவை
உயிர்ச் சிறகை
விரித்துவிட்டது!
நம்மை விட்டுப்
பறந்துவிட்டது!

தேம்புகின்றோம் நாம்!

ஏக்கத்தின் பிடியில்
பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home