Friday, March 27, 2020

வீரர் கழுதையைத் தன்முதுகில் ஏற்றியது
ஈரமான அன்பல்ல! கண்ணிவெடி வைத்தஇடம்!
ஆர்வக் கழுதை மிதித்துவிட்டால் அங்குள்ளோர்
சாவது நிச்சயம்! அஃதேபோல் எங்கெங்கும்
தாவும் கொரோனா பரவி இருக்கிறது!
ஏனோதான் மக்கள் வெளியில் அலைகின்றார்!
ஆனமட்டும் மீறும் கழுதையைக் காப்பாற்றும்
சேனையாய்க் காவலர் மாறுகின்றார் நாள்தோறும்!
காத்தல் நமது பொறுப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home