Wednesday, April 29, 2020

இலக்கியப் புறா ரவிச்சந்திரன்!

இவரிடம் சொல்லிவிட்டால் போதும் எந்த
இலக்கிய மேடை நிகழ்வெனினும் ஏற்றே
துலங்கவைத்துப் பார்க்கின்ற ஆற்றல் உண்டு!
இலக்கியத் தூதர் இவர்.

மதுரை முகவரி சொக்கலிங்கம் சொன்னால்
மறுபேச்சே இன்றியே எள்ளென்றால் எண்ணெய்
கொடுக்கும் செயல்வீரர்  ரவிச்சந்ரன் ஆவார்!
எடுப்பார் தொடுப்பார் விரைந்து.

எல்லா நிகழ்ச்சியின் பின்னணியில் உள்ளவர்!
கள்ளங் கபடின்றிப் பேசிச் சிரித்திருப்பார்!
எல்லோர்க்கும் நண்பர்! உழைப்பார் சலிப்பின்றி!
நல்லவர் இன்றில்லை யே.

கீழப் பெரும்பள்ளம் ஊரே இவரூராம்!
ஆர்வமுடன்  பாவரங்கம் ஏற்பாடு செய்தேதான்
ஊருக் கழைத்து எங்களைப் பாடவைத்தார்!
கோயில்  விழாவில் இலக்கியச் சொற்பொழிவு
நேயமுடன் தந்தார் விருந்து.

சிதம்பரம் அய்யா நிழலிலே வாழ்ந்து
கடைசிவரை சென்னைக்  கமலா அரங்கில்
நடைபோட்டு நாளும் உழைத்தார் ரவிதான்!
இலக்கிய வானில் பறந்த புறாவோ
பறந்ததே வானுள் மறைந்து.

மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home