Tuesday, April 28, 2020

நாட்டுமிராண்டிகள்!

கற்கால நாகரிகத்தில் கண்டபடி வாழ்ந்ததால்
அக்காலம் காட்டு மிராண்டிகள் காலந்தான்!
இக்காலம்  நாகரிகம் எல்லாம் அறிந்திருந்தும்
தொற்றுக் கொரோனாவால்  யாரும்  இறந்துவிட்டால்
மக்கள் அவரைத்தான்  நல்லடக்கம்  செய்வதற்கு
முற்றும்  எதிர்க்கின்ற போக்கு தெரிகிறது!
கற்கால காட்டு மிராண்டிகள் போனாலும்
இக்காலம் நாட்டு மிராண்டிகள் நாங்களென்றார்!
இப்படி நாட்டிலே அங்கங்கே மக்களென்றால்
கற்காலம் எவ்வளவோ மேல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home