Monday, April 27, 2020

கிரவுன் அடுமனை!

இலக்கியப் பள்ளி!

CROWN BAKERY

காலேஜ் ஹவுஸ் விடுதிக்குக் கீழே

நகரரங்குச் சாலை! மதுரை!

இந்த அடுமனைதான்  பொற்கைப் பணியகம்!
இங்கே இலக்கிய வாதிகள் கூடுவோம் !
சென்னை நகரிருந்து வந்தவர்கள் எல்லோரும்
ஒன்றாக சங்கமிப்போம் இங்கு.

பெரியவர்தான் இந்தக் கடையின் அதிபர்!
பெருந்தன்மைப் பண்பாளர் அன்புடன் பேசும்
உயர்நெறி யாளர் அரவணைத்து வாழும்
கலையறிந்த சான்றோர் இவர்.

இந்தக் கடைக்கு வராத இலக்கிய
நண்பர்கள் இல்லை எனலாம்! பொற்கையின்
வண்டமிழ் ஆர்வம் பலருக்குத் தோணி!
இன்றும் நகரரங்குச் சாலைவழி சென்றாலும்
பண்டைய கால நினைவு அலைகளோ
எண்ணத்தைத் தூண்டும் நினைத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home