Sunday, April 26, 2020

மக்கள் மனம்

அடுத்தவீட்டுக் காரர் அயலாரைப் போல!
அடுத்தவீதிக் காரர் அடுத்தமா நிலம்போல்!
அடுத்தஊர்க் காரர் அடுத்தநாடு  போல!
அடுத்தமா நிலத்தார் அடுத்தகோள் போல!
படுத்தும் கொரோனாவின் பாதிப்பால் மாந்தர்
வெறுப்பிலும் தன்னலக் கூட்டிலும் வாழும்
செறுபகை உணர்வுகொண்டார் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home