Saturday, April 25, 2020

கோலாகல சீனிவாசன் வாழ்க!

15.08.1984

அக்காவின் மைந்தனாம் பாலுவின் நண்பனாக
அக்காலம் வீட்டுக்கு வந்து பழகியவர்!
முத்திரைப் பாக்கள் எழுதிக் கவியரங்கில்
முத்திரை நாட்டி வியந்திட வைத்தவர்!
பட்டிமன்றப் பேச்சாளர் பன்முக ஆற்றல்கள்
அட்டியின்றி கொண்டவர்! நன்கு படிப்பவர்!
எத்துறை என்றாலும் முன்னணியில் வந்திடுவார்!
அத்திறமை கொண்டவரை வாழ்த்து.

நற்கூடல் என்னும் இலக்கிய மேடையை
நற்றமிழ்ச் சங்க வளாகத்தில் பாப்பையா
தொட்டுத் தொடங்கிவைக்க சௌமிய நாராயண்
அற்புத மாக விளக்கேற்ற  ஏற்பாடு!
சட்டென்று பார்த்தோம் விளக்கில்லை! என்செய்வோம்?
நட்புடன் சீனிசென்றார் வீடு.

சங்கத்தின் பக்கம் திலகர்  திடலெதிரில்
நண்பரின் வீடு! விளக்கெடுத்து வந்துவிட்டார்,!
எங்கள் நிகழ்ச்சியும் நன்கு நடந்தேறி
ஒன்பதாண்டாய் தொய்வின்றி தந்தோம் நிகழ்வு!

காலமாற்றம் கோலமாற்றம் பெற்றே இடமாற்றம்
நாலுதிக்கில் எங்களைப் பந்தாட மாறிவிட்டோம்!
வாழ்வில் குடும்ப நண்பராய் சீனிவாசன்
தோள்கொடுத்தார் பாடுபட்டார் வாழ்த்து.

இன்று தொலைக்காட்சி வாதத்தில் பார்க்கின்றேன்!
தன்கருத்தை ஆணித் தரமாக வைக்கின்றார்!
நண்பர் நடுநிலை ஏற்றேதான் பேசுகின்றார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home