Monday, April 27, 2020

பாவா முத்துவீரன்அவர்களின் நினைவுநாள்!

பாவா முத்துவீரன்அவர்களின் நினைவுநாள்!

இயற்கை எய்திய நாள் 28.04.87--

மதுரை நகரிருந்து காரைக் குடிக்கு
நெடும்பயணம் கொட்டும் மழையிலே
சென்றோம்,!
கெடுதல் அறியாத நல்லவராய் வாழ்ந்தார்!
அதனால் இயற்கை மழைபெய்து அஞ்சலி
செலுத்தியதோ அந்த இரவு?

மதுரை பாபாராஜ்

Saravananddl:

கழிந்ததோ ஆண்டுகள் முப்பத்திமூன்று...
ஐயனை நினைவில் நிறுத்தி வாழ்கிறோம் இன்றும்...
கூறிய வார்ததைகள் ஒவ்வொன்றும்...
அர்த்தம் பொதிந்தவைதாம் என்றென்றும்...
தகப்பனாய் இருந்து நீங்கள் காட்டிய வழிகள் எல்லாம்...
பாதைகளாய் தெரிந்தது
நாங்கள் தந்தை ஆன பிறகுதான்.
சிறகுகள் முளைக்கும் முன்னர் தான்
எம்மை விட்டு பிரிந்து விட்டீர்.
நீங்கள் செய்த நற்செயல்களே நாங்கள்
வாழும் வாழ்கையின்
தூண்டுகோல்.
குழந்தைகளின் மேல் கொள்ளைப் பிரியம்.
ஆனால் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பினை இல்லை.
ஆண்டுகள் எத்தனை மறைந்தாலும் எங்கள் இதயத்தில் என்றும் வாழ்கின்றீர்கள் நைனா...

அன்பு மகன் சரவணப்பெருமாள்

0 Comments:

Post a Comment

<< Home