Saturday, May 23, 2020

நன்றி: திண்டுக்கல் மாவட்ட காவல் துறை

கொரோனாவுக்கு முன்!( கொ.மு.)

பார்த்ததும் கைகொடு! பக்கத்தில் சென்றேதான்
ஆர்வமுடன் செல்லமாய்த் தோள்தட்டு! கூடவே
போய்தான் அமர்ந்தேதான் பேசு! விலகாமல்
நாளும் விளையாடப் போ.

கொரோனாவுக்குப் பின்!( கொ.பி.)

பார்த்ததும் கைகூப்பு! பக்கத்தில் போகாதே!
ஆர்வமுடன் செல்லமாய்த் தட்டாதே! கூடவே
போய்நீயும் உட்கார்ந்து பேசாதே! தூரமாக
பார்த்தே விலகித்தான் நில்லு! பழகாதே!
தாழ்போட்டு வீட்டுக்குள் வா.

மதுரை பாபாராஜ்










0 Comments:

Post a Comment

<< Home