Saturday, May 30, 2020

வேடம் கலைந்துவிடும !

குறள்களில் நுண்மாண் நுழைபுலம்  மிக்கோர்
குறள்நெறியைப் பின்பற்ற வேண்டும்
வாழ்வில்!
குறள்கூறும் பண்புகளை  மேற்கொள்ள வேண்டும்!
மறத்தல் குறளுக்( கு) இழுக்கு.

மேற்கோள் காட்டி குறளை அடுக்குவார்!
மேடை இறங்கியதும் அப்படியே மாறிடுவார்!
வேடமிட்டு வாழ்தல் முறையல்ல! எப்போதும்
வேடம் கலைந்துவிடும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home