Saturday, May 30, 2020

ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

மேடையில் பாலா பொழிவினைக் காமராசர்
கேட்டேதான் பாராட்டித் தன்னுடன்
நாடறிய
காரிலே ஏற்றிப் பயணித்த நேரத்தில்
ஆற்றலை நீயேன் இந்த அரசியலில்
ஊற்றுகிறாய் இங்கே பலருள்ளார் நீபடித்து
ஏற்றமுடன் ஆட்சிப் பணிக்கு வரவேண்டும்
நாற்றை மனதிலே நட்டுவைத்தார்! பாலாவும்
ஏற்றே கனியவைத்தார் காமராசர் சொன்னதை!
போற்றுகின்றார் இன்றும் நினைந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home