Friday, May 29, 2020

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

படித்த ஆண்டுகள் 1961 -- 1965

சேதுபதி பள்ளியில் அக்கால மணிகள்!

தொடர்வண்டி செல்லும் இரும்புத் தகடை
மரத்திலே தொங்கவிட்டு பள்ளி வகுப்பு
ஒருமணி நேரம் கழிந்தால் அடிக்கும்
வழக்கம் ,இருந்தது! கொஞ்சநாள் செல்ல
பளபளக்கும் பித்தளை மணியோ வட்ட
உருவத்தில்  தொங்கவிட்டார்! பள்ளி வகுப்பு
கலைகின்ற நேரம் மணியடிப்பார் வந்து!
ஒலியோ அலையலையாய் வந்தேதான் கேட்கும்!
மணியடிக்கும் ஊழியர் நெற்றியில் பட்டை
மணங்கமழ குங்குமப் பொட்டுடன் பக்தி
மணக்க வருவார் விரைந்து.

மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home