Saturday, June 20, 2020

இலக்கியக் காட்சி!

முத்தொள்ளாயிரம் பாடல் 45

தானைகொண்டோடுவ தாயின்றன் செங்கோன்மை
சேனை அறியக் கிளவேனோ—யானை
பிடிவீசும் வண்டடக்கை பெய்தண்டார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது.

தானை=ஆடை:  வண்தடக்கை= வழங்கும் நீண்ட கை;  தண்டார்=

கொடைமடம் உள்ளவன் கிள்ளிதான்! ஆமாம்
கொடுக்கும் கரங்கொண்டோன் என்றபோதும் நானோ
படைமுன்னே கேட்பேன் செங்கோலன்  நீயா?
நடைபோடும் தோழியே என்னசெய்தான்  என்பாய்?
கொடுக்கும் அவனைநான் பார்த்ததும் ஆடை
நழுவியதே அப்படிச் செய்துவிட்டுச் சென்றான்,!
அடுக்குமா சொல்வாயா தோழியைக் கேட்டாள்!
படுத்துகின்ற பாட்டிலே மாது.

மதுரை பாபாராஜ்

ஹைக்கூ
களிறு பிடிகளை வழங்கும் வளவனை
வெளிவீதியில் படைகள்முன் வினவுவேன்;நீ
அளிமிக்கோன் எனில் ஏன் கவர்ந்தாய் என் ஆடையை

கே ஜி ராஜேந்திர பாபு

0 Comments:

Post a Comment

<< Home