Monday, September 28, 2020

முத்தொள்ளாயிரம் 70

 முத்தொள்ளாயிரம் 70


என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல்,

அன்னையும் இன்னள் என உரையல், பின்னையும்

தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என்

கண் படா ஆறே உரை


என்னையும் சொல்லாதே என்பெயரைச் சொல்லாதே 

என்ஊரைச் சொல்லாதே தாய்க்குணத்தைச் சொல்லாதே மன்னனிடம் தோழியே எந்தன் விழியிரண்டும்

துன்புற்றுத் தூங்க மறுக்கும் நிலைதன்னைச் 

சென்றேதான் காதலைச்  சொல்.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home