Friday, October 02, 2020

ஊக்கம் உயர்வைத்தரும்

 ஊக்குவிற்பவன் தேக்கு விற்பான்!


வாய்ப்பை மறுக்காதே!


ஊக்கமும் வாய்ப்பும் கொடுத்தால் முயற்சியால்

ஊக்குகள் விற்பவனும் தேக்குமரம் விற்கின்ற

ஆற்றலைக் காட்டுவான்! வாய்ப்பை அடைத்துவிட்டால் 

ஆற்றல் அடங்கி ஒடுங்கிவிடும் வாழ்க்கையோ

காற்றில் சருகாகும் காண்.


மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger தமிழ் இயலன் said...

மிகச் சிறப்பு ஐயா

1:35 AM

 

Post a Comment

<< Home