Sunday, November 29, 2020

4.அறன் வலியுறுத்தல்

 


4. அறன்வலியுறுத்தல்

குறள் 31:

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கென்றார் அய்யன்!
அறவழி மேன்மையும் செல்வமும் என்றும்
சிறந்த பயனைத் தரும்.

குறள் 32:

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடென்றார் அய்யன்!
அறச்செயல் செய்வதைப்போல் வேறுநன்மை உண்டோ?
அதைமறத்தல் என்றுமே தீது.

குறள் 33:

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயலென்றார் வள்ளுவர்!
செய்கின்ற நற்செயலை எல்லாம் அறவழியில்
செய்யவேண்டும் எங்கெனினும் செப்பு.

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிறவென்றார் அய்யன்!
மனத்தளவில் குற்றமின்றி வாழ்தல் அறமே!
மனவேடம் ஆரவாரந் தான்.

குறள் 35:

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறமென்றார் அய்யன்!
பொறாமையும் ஆசையும் கோபமுடன் வன்சொல்
இலாத குணமே அறம்.

குறள் 36:

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணையென்றார் வள்ளுவர்!
அன்றன்றே நல்லறம் செய்யவேண்டும்!
அப்புகழே,
சென்றபின்பும்  நிற்கும் நிலைத்து.

குறள் 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடையென்றார் அய்யன்!
அறவழி இன்பம் சிவிகைக்குள் உள்ளோன்!
மறந்தால் சுமப்போன் துயர்.

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்லென்றார் வள்ளுவர்!
வாழ்நாள் முழுதும் விதைக்கும் அறச்செயல்
வாழ்க்கையைச் சீராக்கும் கல்.

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இலவென்றார் அய்யன்!
அறவழி இன்பமே இன்பமாம் மற்ற
வழிவந்தால் துன்பந்தான் செப்பு.

குறள் 40:


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழியென்றார் அய்யன்!
அறவழியைப் பின்பற்று நன்மை திரளும்!
புறக்கணித்தால் என்றும் பழி.

மதுரை பாபாராஜ்























0 Comments:

Post a Comment

<< Home