Saturday, November 28, 2020

3. நீத்தார் பெருமை

 குறளுக்குக் குறள்வடிவில் பொருள்



3. நீத்தார் பெருமை

குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவென்றார் அய்யன்!

ஒழுக்கமான உண்மைத் துறவிகளை நூல்கள்

பழுதின்றிப் போற்றும் உணர்.

குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்றென்றார் அய்யன்!

இறந்தோர் அளவைக் கணித்தல் அரிது!

துறவிப் பெருமையும் தான்.

குறள் 23:

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்

பெருமை பிறங்கிற் றுலகென்றார் அய்யன்!

இருநிலை இன்பதுன்பம் நன்கறிந்தே ஆசை

அறவே நீக்கல் உயர்வு.

குறள் 24:

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தென்றார் அய்யன்.

உறுதியெனும் அங்குசத்தால்  ஐம்புலனை வென்றோன் 

துறவு நிலத்திற்கு வித்து.

குறள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரியென்றார் வள்ளுவர்!

ஐம்புலன் ஆசையால் இந்திரன் சீரழிந்தான்!

வென்றால் உயர்வுக்குச் சான்று.

குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தாரென்றார் அய்யன்!

உயர்செயல்  செய்வோர் பெரியோர்!

இழிந்த

செயல்செய்வோர் தாழ்ந்தோர் உணர்.

குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகென்றார் அய்யன.

புலனடக்கம் உள்ளோர்க்கே என்றும்

உலகம்

வசப்படும் வாழ்வார் நிமிர்ந்து.


குறள் 28:


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடுமென்றார் அய்யன்.

அறிஞர்கள் பண்பை அவர்களது பேச்சு

செறிவுடன் காட்டும் உணர்.


குறள் 29:


குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிதென்றார் அய்யன்.

அறச்சீற்றம் கொண்ட துறவிகளின் கோபம்

புகைந்தால் எதிர்த்தல் அரிது.


குறள் 30:


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லானென்றார் அய்யன்!

அன்பு கருணை கடைபிடிப்போர் எல்லோரும்

அந்தணர் என்றழைப்போம் சாற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home