Thursday, November 26, 2020

நிவர் தாக்கம்

 நிவர் புயலின் தாக்கம்!


ஆழியில் தோன்றி நகர்ந்து நகர்ந்தேதான்

ஊழியாய் மாறி கரையைக் கடந்திடும்

வேளையில் ஊருக்கும் மக்களுக்கும் சேதத்தை

ஊளையிட்டே  பேரழிவாய் ஏற்படுத்திச் செல்கின்றாய்!

கூரைகளைப் பிய்த்தெறிந்தும் வாழை, பயிரினத்தை

ஈவிரக்கம் இல்லாமல் சாய்த்துவிட்டுப் போகின்றாய்!

மாமரங்கள் சாய்ந்தே சரிந்துவிழும் கோலங்கள்!

மின்கம்பம் சாய்ந்துவிழ வெள்ளப் பெருக்கெடுத்து

அங்கங்கே வீட்டுக்குள் பாய்கின்றாய்

மக்களோ

எங்கெங்கோ ஓடுகின்றார் வாழ்விடம் தேடித்தான்!

துன்பத் துயரே நிவர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home