Thursday, February 25, 2021

முத்தொள்ளாயிரம் 13

 முத்தொள்ளாயிரம்

பாடல் 13

நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய

ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிற்

புகலும் களியானைப் புழியர் கோக் கோதைக்கு

அழலுமென் நெஞ்சங் கிடந்து. 13

--------------------------------------------------------------------

கவிதை!


வெம்மையைத் தீர்க்கின்ற நீரும் நிழலும்போல்

என்றும் அருள்புரியும் ஊராரே! காத்தருள்க!

அங்கே வருகின்றான் பூழிநாடன் கோதைதான்!

கம்பீர யானையுலா பாருங்கள்! என்னுடைய

நெஞ்சைக் கவர்ந்துவிட்டான்!  காத்தருள்க என்னைத்தான்!

கெஞ்சுகிறாள் ஆரணங்கு தான்.









0 Comments:

Post a Comment

<< Home