Monday, March 29, 2021

தெய்வத்திரு.கல்யாணி அக்காவுக்கு நினைவேந்தல்


 தெய்வத்திரு.கல்யாணி 

அக்காவுக்கு நினைவேந்தல்


30.03.21( 1943 மார்ச்)

மதுரை  வடக்குமாசி வீதி  இராமாயணச் சாவடிக்கு அருகில் வீடு!


குழந்தைப் பருவத்தில் தன்னுயிர்

நீத்தார்!

குடும்பத்தில் சோகமேகம்! துன்பத்தால் தந்தை

பணியைத் துறக்க முனைந்தார்! அலுவல்

பணியாளர் வற்புறுத்த மீண்டும் கடமை

சுமக்கத் துணிந்தார் தொடர்ந்து.


தெளிவாகப் பேசும் மழலைச் சிறுமி!

அழுகை அருவியில் பெற்றோரும் உற்றார்

உறவுகளும் ஏங்கவிட்டுச் சென்றுவிட்டார் அன்று!

மறக்காமல் இங்கே நினைத்தேதான் வாழ்வில்

வணங்குகிறோம் அன்பாய் மதித்து.


மதுரை பாபாராஜ்

குடும்பத்தார்


0 Comments:

Post a Comment

<< Home