Thursday, April 08, 2021

கல்லறைத் தாழே! திற

 கல்லறைக் கதவே  திற!


உள்ளே அழுகை! வெளியே சிரிக்கின்றேன்!

இவ்வுலக வாழ்க்கை நடிப்பில் நகர்கிறது!

எவ்வளவு நாளோ தெரியவில்லை! என்னுயிர்

உள்ளவரை என்றால் முடியாது! தாங்காது!

கல்லறைத் தாழே திற.


வேதனை அம்பு துளைக்கின்ற நேரத்தில்

சோதனைத் தீயோ படர்கின்ற நேரத்தில்

பாடாய்ப் படுத்துகின்ற சூழ்நிலை கொக்கரித்தால்

வேடமே வாழ்வு! விளம்பு.




0 Comments:

Post a Comment

<< Home