Wednesday, March 31, 2021

குடிக்காதே!

 குடி குடியைக் கெடுக்கும்!


சரக்கடிக் காதே

தம்மடிக் காதே

குடும்பத்த தெருவுல

நிக்க வக்காதே!


சம்சாரத்த பாரு

குழந்தகள பாரு

பெற்றோர பாரு

உறவுகள பாரு


எதுத்தவீடு நல்லாருக்கு

தண்ணி அடிக்கல

பக்கத்துவீடு நல்லாருக்கு

தண்ணி அடிக்கல


நீமட்டும் ஏனிங்கே

தண்ணி அடிக்கிற?

ரோட்டு மேல ஏனோதான்

விழுந்து கெடக்குற?


பிள்ளங்கள படிக்கவக்கும்

கடமை இருக்குது

குடும்பத்த காப்பாத்துற

பொறுப்பு இருக்குது


தலநிமிந்து வாழவேணும்

நல்லா புரிஞ்சிக்க

நாலுபேரு மதிக்க வாழணும்

நல்லா தெரிஞ்சுக்க


மதுரை பாபாராஜ்









0 Comments:

Post a Comment

<< Home