Saturday, July 17, 2021

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


பறவையே!

இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கேட்டுவிட்டுச் செல்:


குறுந்தொகை 40


பாடியவர்: செம்புலப் பெயனீரார்

பாடல்


யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

------------------------------------------------------------


--

அன்பரசி! உன்தாயும் என்தாயும் எவ்வகையில்

இங்கே உறவினர்? உன்தந்தை என்தந்தை

என்ன முறையில் உறவினர்கள்? நம்மிதயம்

அன்பில் கலந்ததும் எப்படியோ? முன்பின்னே

இம்மண்ணில் நாமிருவர் சந்தித்த நாளென்றோ?

செம்மண்ணில்  நீர்கலந்தே ஒன்றிய கோலம்போல்

அன்பால் இதயங்கள் நம்மைத்தான் சேர்த்ததுவே!

அன்பே இணைப்பின் உயிர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home