Thursday, July 15, 2021

நண்பர் I G சேகர் அனுப்பிய பறவைகள் படம்!

 நண்பர் I G சேகர் அனுப்பிய பறவைகள் படம்!



பறவைகளே இன்றைய கவிதை!


எல்லை மீறினால் !

ஐம்பெரும் பூதங்களும் ஐம்புலன்களும்!

-----------+--------------------------------------------------

நிலம் , நீர் , தீ , காற்று, வானம்!

--------------------------------------------------------------------

நிலநடுக்கம் வந்தால் அழிவோ பெரிதாகும்!

எழுகடல் நீரும் திரண்டு சுனாமி

உருவெடுத்தால் சொல்லியே மாளாது துன்பம்!

நெருப்பின் பொறிகள் உலகையே அழிக்கும்!

செருக்குடன் வீசும் புயற்காற்றால் வையம்

இருந்த இடம்தெரியா வண்ணம் அழியும்!

பரந்திருக்கும் வானம் வெடித்து மழையை

உலகிலே வெள்ளமாக்கி கூத்தாட்டம் போட்டால்

அழிவிற்கோ எல்லயில்லை சாற்று.


ஐம்பெரும் பூதங்கள் எல்லைக்குள் நாள்தோறும்

அன்பாய் அடங்கி இருந்தால் அழிவில்லை!

ஐம்புலனை மாந்தர் அடக்கியே வாழ்ந்திருந்தால்

அண்டாது வாழ்வில் அழிவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home