Thursday, July 29, 2021

மருமகன் ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!



மருமகன் ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


 நாள்:29.07.21


அகவை 50 பொன்விழா!


இல்லற முத்துக்கள்:

மனைவி: பிருந்தா

மகன்:  கோசல் கல்யாண்


சிவகங்கை சீமையை விட்டேதான் நான்கு

வயதிலே எங்களுடன் வந்தார் மதுரைக்கு!

அழகான நான்மாடக் கூடலிலே வாழ்க்கை

நிலைத்தது! பாவாவும் மாறுத லாகி

தமிழ்நகர்  வந்தார் குடும்பத் தோடு!

மலைக்கவைக்கும் மாற்றந்தான் ராஜ்குமார் வாழ்வில்!

வளம்பல பெற்றுவாழ்க நீடு.


அறவழி வாழ்கை சிறப்பு!

 அன்பைப் பகிர்வதில் களிப்பு!

சிறப்புகள் பெற்ற கல்வி!

 சிந்தை கவரும் பண்பு!

புதுக்கவி தைகளில் வேந்தர்

 பக்தி நெறியில் பயணம்!

கடமை தவறாத உள்ளம்!

 கருணையே இவரது இல்லம்!


பொன்விழா காணுகின்ற பொன்மன ராஜ்குமார்

அன்பு மனைவி, மகனின் மகிழ்ச்சியுடன்

பெற்றோரின் ஆசியுடன் நண்பர்கள் உறவினர் 

எத்திசையும் வாழ்த்திசைக்க நூறாண்டு வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு்.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


0 Comments:

Post a Comment

<< Home