Thursday, August 19, 2021

தமிழ்நெடுஞ்சாலை


 அன்புள்ளம் கொண்ட கவிஞர் பாலாவுக்கு வணக்கம்.


தமிழ்நெடுஞ்சாலை!


கற்பனைக்கு அப்பால்...காஷ்மீர் நினைவுகள்


கவிஞர் பாலாவுக்கு வாழ்த்து!

பாலாவை நாடிவந்து சொற்கள் அணிவகுக்கும்!

பாலா விரல்நுனியில் நானென்றும் நானென்றும்

தூதுவிட்டு முண்டி நெருக்கும் நிலையுணர்ந்தேன்!

கோதிவிட்டுத் தேர்ந்தெடுக்கும்  பாலாவை வாழ்த்துவோம்!

சாதனை நாயகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


பாலாவின் முத்திரை வரிகள்:

அந்த இரண்டு கிராமங்களும் மக்களாட்சி என்ற மகத்துவப் பெருமையின் புதிய உச்சம்.

ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் ஒவ்வொரு விதமான ஆடுகளம்.

மேற்கு வங்கம்: சடுகுடு ஆடிக்கொண்டே சதுரங்கம் ஆடுவதுபோல

காஷ்மீர்த்தேர்தல்: உருவகப்படுத்த முடியாத தோராயப் புதிர்.காய்கள் நகரும்;யார் நகர்த்துகிறார்கள் என்று தெரியாது.

ஜம்மு ஒருபுறமும் காஷ்மீர் ஒருபுறமும் களமிறங்கியது தீவிரவாதத்திற்குத் 

தீனி போட்டது.

தேர்தல் ஆணையத்தின் செங்கல் சுவர்களுக்கிடையே வேறொரு வியூகம். ஐந்தாம் ஆறு அல்ல 

காஷ்மீர் த்தேர்தல் , அது வேறு.

உண்மை வாய்மூடினால் வதந்திகள் மாநாடு நடத்தும்.

ஆட்சிப்பணி என்பது மாபெரும் அரசு இயந்திரத்தின் முக்கியமான ஓர் உதிரிபாகம்தான். அதன் இருப்பை நியாயப் படுத்துவது கோப்புகள் அல்ல; கூடுதல் மைல்கள்.


அருமை அருமை.

என்றும் நட்புடன்

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home