Thursday, August 26, 2021

வழிகேட்டேன்! கேட்டவரிடம் வந்தேன்,!

 வழிகேட்டேன்! கேட்டவரிடம் வந்தேன்,!


எப்படிப் போகவேண்டும் என்றுநான் கேட்டதற்கு

இப்படிப் போகவேண்டும் அப்படிப் போகவேண்டும்

அப்படி வந்து திரும்பியும் இப்படி

அப்படி வந்தால் விரும்பும் இடம்வரும்

என்றார் பின்பற்றி வந்தேன் பிசகாமல்!

வந்தேன்நான்! கண்டேன் வினவிய ஆளைத்தான்!

இப்படித்தான் வாழ்க்கை சுழன்று சுழன்றேதான்

சுற்றவைத்து மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே

கொண்டுவந்து சேர்க்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home