Friday, October 29, 2021

மகன் எழிலரசன் கல்வியில் திருப்புமுனை!


மகன் எழிலரசன் கல்வியில் திருப்புமுனை!

1995--1998 அடைக்கலமாதா கல்லூரி!

அம்மா வசந்தாவின் முயற்சியால் முன்னேற்றம்!


பள்ளிப் படிப்பு முடிந்ததும் என்னபாடம்

கல்லூரி  வாழ்வில் எடுக்கலாம் என்றேதான்

உள்ளம் அசைபோட  அம்மா தமிழாசான்

தஞ்சையின் கோவிந்தம் மாள்தான் அறிவுரையை

தந்தார் கணினிப் படிப்பை படிப்பதற்கு!

முன்வைத்தார் மைந்தனுக்குத் தான்.


தஞ்சை அடைக்கல மாதாகல் லூரியில்

அன்புடன் சேர்த்தார்கள் அண்ணனும் தங்கையும்!

தஞ்சையில் அத்தையின் இல்லத்தில் 

தங்கினான்!

நன்முறையில் பட்டத்தைப் பெற்றான்!

கணினியில்

மென்பொருள் தேர்ந்து தெளிந்தே உயர்கின்றான்!

இன்றவன் வாழ்க்கைத் தளத்தை அமைத்தவள்

முன்னெடுத்த அம்மாதான் சொல்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home