Saturday, November 27, 2021

அனைவருடனும் களத்தில் நிற்பேன்


அனைவருடனும் களத்தில் நிற்பேன்!

-மாண்புமிகு முதல்வர். மு.க. ஸ்டாலின்!

அனைவருக்கும் நன்றி!


வெள்ள நிவாரணத் தொண்டுகளில் ஈடுபடும்

உள்ளத்தைக் கொண்டோர் மனிதநேயச் செம்மல்கள்!

அல்லும் பகலும் மழையில் நனைந்து பணிக்களத்தில்

சொல்லொணாத் துன்பத்தை ஏற்றே உழைக்கின்றார்!

எல்லோ ருடனும்நான் தோளோடு தோள்நிற்பேன்!

சொல்வது மட்டுமல்ல செய்துகாட்டும் நம்முதல்வர்

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


கொட்டும் மழையைப் பொருட்படுத் தாமலும்

அற்புத மாகப் பணியாற்றும் எல்லோரும்

நன்றிக் குரியவர்கள்! வாழ்த்தி வணங்குகிறோம்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்




 

0 Comments:

Post a Comment

<< Home