Friday, November 26, 2021

படம் ஒன்று கவிதைகள் இரண்டு



 




படம் ஒன்று கவிதைகள் இரண்டு!

எப்போதும் கைபேசி காதோடு காதிருக்க
சுட்டும் சுடர்விழிகள் இங்கே மடிக்கணினி
கொட்டும் விவரத்தைப் பார்த்திருக்க
நாள்தோறும்
இப்படி வாழ்கின்ற கோலங்கள் வீட்டிலும்
என்றால்நாம் பேசுவ(து) என்று?

என்னதான் வேலையில் மூழ்கி இருந்தாலும்
தங்கள் குழந்தைக்கு வேண்டு்ம் உணவினைத்
தங்குதடை இன்றியே ஊட்டுகின்ற அம்மாவின்
அன்பிற்(கு) இணையுண்டோ? சொல்.

மதுரை பாபாராஜ்

வாழ்வில் வளங்கள் பல்கி பெருகிட
வளரும் தலைமுறையின் ஆவல்களை பூர்த்தி செய்ய
தம்மை வளர்த்த தலைமுறையின் நலத்தைக் காத்திட
ஏற்ற கடமைகளை செவ்வனே முடித்திட
காதில் கைபேசியுடன் மடிக்கணினி ஏந்திய நாங்கள் இருக்கும் கோலம் குடும்பத்திற்கான அழகு மிகுந்த ரங்கோலி...
பி.கு. பேசுவதற்கு எங்களுக்கும் ஆசை தான். புலி வாலைப் பிடித்தாகி விட்டது😳

மு.சரவணப் பெருமாள்,திண்டுக்கல்.

0 Comments:

Post a Comment

<< Home