Wednesday, December 29, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை


வணக்கம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை


வணக்கம் கூறிய புறாவே!

இன்றைய கவிதை கேள்!


திரைப்பாடல் அன்று! 

அதற்குரிய கவிதை இன்று!


பாடல் வரி:


காதோடுதான் நான்பாடுவேன்

மனதோடு தான் நான்பேசுவேன்!


கவிதை:


காதோடு வைத்தேதான் கைபேசி வாயிலாக

ஏதேதோ பேசுகிறேன் உள்ளம் மறந்தேதான்

ஊர்க்கதைகள் மற்றும் அவசியப் பேச்சுகளும்

பேசுகிறேன் இங்கே மகிழ்ந்து.


பாடல் வரி:

விழியோடு தான் விளையாடுவேன்

உன் மடி மீது தான் கண் மூடுவேன்


கவிதை:

மடிக்கணினி மீது விரலோட நாளும்

விழியோடு தானே விளையாடு கின்றேன்!

மடிக்கணினி மீதுநான் தூங்கி வழிந்தே

மடிமீது கண்மூடு வேன்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home