Tuesday, November 15, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


நம்பிக்கை கொண்டால் அமைதியைக் கூடநாம்

நன்கு புரிந்துகொள்வோம்! நம்பிக்கை இல்லையெனில்

ஒவ்வொரு சொல்லையும் நாமோ தவறாக

எண்ணிக் கலங்குவோம்! நம்பிக்கை ஒன்றுதான்

நம்முறவின் ஆன்மா உணர்.


மதுரை பாபாராஜ்

 Vovemayavaramban: 

நன்று அய்யா!

நன்றி!

நம்பிக்கை நமது தும்பிக்கை!

நம்பி கைவைத்தால்

நலமே பயக்கும்!

புரிதலே ஆதாரம்!

புரிந்து நடந்தால்

தவிர்க்கலாம் சேதாரம்!

தழைக்குமே பரிவாரம்!

 Madurai Babaraj: புறத்தில் வான்மழை!

அகத்தில் கவிதை மழை!

கருத்தெல்லாம் தேன் மழை!

இமயத்தின் நட்பிற்கோ வாழ்த்து மழை!

பாபாV

Vovemayavaramban: 

தங்கள் அன்பு மழையால்

அங்கமெங்கும் இன்ப மழை!

நன்றி அய்யா!🙏🙏

 

0 Comments:

Post a Comment

<< Home