Sunday, March 05, 2023

மதிப்பிற்குருய அப்துல்கலாம் ஐயா


மதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிக்குத்

தமிழாக்கம்!


நெருக்கமாக உள்ளோரை  விட்டுவி டாதே!

ஒருசில தப்புகளைக் கண்டுவிட்டால் கண்ணை

விரைந்தேநீ மூடிக்கொள்! நண்பருடன் நீயோ

கலந்துரை யாடி மகிழ்ந்த சிறந்த

தருணத்தை எண்ணிக்கொள்! ஏனென்றால் அன்பு

முழுமையைக் காட்டிலும் முக்கிய மாகும்!

விலைமதிப் பற்றதே அன்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home