Monday, August 19, 2024

அம்மா இதயம் கதை

 அம்மா இதயம்!: கதை!


அம்மாவைக் கொன்றேதான்  அம்மா இதயத்தைக்

கொண்டுவா! என்றாளாம்! அந்தத்  .தனயனும்

அம்மா இதயத்தைக் கொண்டுசென்ற நேரத்தில்

அங்கே தடுக்கி விழுந்தே அலறினான்!

அம்மா! எனவலியில்  கத்தினான்! தாயிதயம்

அய்யகோ காலடி பட்டதோ மைந்தனே!

என்றே இதயம் துடித்தேதான் கேட்டதாம்!

இப்படிப் பட்டதாயைக் கொன்றேனே என்றழுதான்;

அம்மா இதயம் அது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home