மீண்டெழுந்தேன்
மீண்டெழுந்தேன்!
1995- அக்டோபர்!
தந்தை இருக்குமட்டும் வாழ்வில் சுமையில்லை!
தந்தை இறந்தபின்னே வாழ்வின் சுமையறிந்தேன்!
அன்றாட வாழ்வை நகர்த்த கடன்பெற்றேன்!
நண்பர்கள் செய்த உதவி மறக்கமாட்டேன்!
பென்னர் பணியைத் துறக்க முடிவுசெய்தேன்!
என்வாழ்க்கை கேள்விக் குறி?
GENERAL MANAGER MR.CN அவர்களுக்கு நன்றி:
மடலைக் கொடுத்ததும் மேலாளர் வாங்கிப்
படித்தார்! அதிர்ந்தார்! பெருமூச்சு விட்டார்!
திருப்பிக் கொடுத்துவிட்டு உங்களுக்கு மாற்றம்
தருகிறேன் என்றார்! சரியென்றேன் வந்தேன்!
சருகு தழைப்பதற்கு வாய்ப்பு.
VICE PRESIDENT MR.ARC அவர்களுக்கு நன்றி:
சென்னைக்குப் போங்களென்றே அன்புடனே என்னையோ
அன்று இருவரும் சொன்னதால் சென்னையில்
என்வாழ்க்கை நன்கு தொடர்ந்தது! வாழ்கின்றேன்!
என்வாழ்வில் மீண்டெழ வாய்ப்பு.
காலத்தே இந்த உதவியைச் செய்ததாலே
வாழ்க்கையில் மீண்டெழுந்தேன் நான்.
என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home