Tuesday, March 24, 2026

இனியவை கூறல் -- 10

 


--------------------------------------------------------------

இனியவை கூறல் -- 10

----------------------------------------------------------------

நல்லதைப் பேசினால் நன்றாக வாழலாம்

----------------------------------------------------------------

அறநெறி வாழ்வை ஏற்றவர்கள்

பேசும் சொற்கள் இனிமைதான்!


அள்ளிப் பொருளைத் தருவதினும்

இன்சொல் பேசுதல் உயர்வாகும்!


அகமும் முகமும் மலர்ந்திருக்க

இன்சொல் கூறுதல் அறமாகும்!


பணிவும் இன்சொல் பேசுதலும்   

அணிகல னாகும் மாந்தருக்கு!


இனிமை யாகப் பேசுவோரை

வறுமை என்றும் தீண்டாது!


இன்சொல் பேசுவோர் வாழ்வினிலே

பாவம் தேய்ந்தே அறம்வளரும்!


நன்மை வளர்க்கும் இன்சொல்லைப்

பேசினால் நன்மை உண்டாகும்!


துன்பம் தருதல் அற்பந்தான்!

இன்பம் தருவது இன்சொல்லே!


கனிகளை விட்டுக் காய்களையே

உண்டு களிக்க நினைப்பவர்போல்

இன்சொல் இருக்க வன்சொல்லை

விரும்பிப் பேசுதல் அறிவின்மை!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home