Wednesday, March 25, 2026

அழுக்காறாமை--17

 ---------------------------------------------------------

அழுக்காறாமை--17

-------------------------------------------------------------

மனதில் பொறாமை இல்லாமல்

வாழ்வதே நல்ல ஒழுக்கமாம்!

----------------------------------------------------------

பொறாமை இன்றி அனைவரிடம்

பழகுதல் அருமைச் சிறப்பாகும்!


பிறரைக் கண்டு புழுங்குபவன்

மாசு படிந்த தீயவனாம்!


துன்பம் தருவது இதுவென்றே

அறிந்தும் இங்கே அறிவுடையோர்

தீமை செய்ய அஞ்சிடுவார்!


பொறாமை கொண்ட மனிதருக்கு

பகைவராய் உள்ளதும் பொறாமைதான்!


அடுத்தவ ருக்குக் கிடைப்பதையே

பார்த்துப் பொறாமை கொண்டவனின்

சுற்றம் வறுமையில் அழிந்துவிடும்!


பிறரது உயர்வைக் கண்டேதான்

பொசுங்கிப் போகும் மனிதனிடம்

செல்வம் என்றும் தங்காது!

வறுமை நிலையாய்த் தங்கிவிடும்!

பொறாமை செல்வத்தை அழித்துவிடும்!

தீய வழிசெல்லத் தூண்டிவிடும்!

பொறாமை கொண்டவர் உயர்ந்ததில்லை!

விலக்கி வாழ்பவர் தாழ்ந்ததில்லை!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home