செய்ந்நன்றி அறிதல் -- 11
செய்ந்நன்றி அறிதல் -- 11
----------------------------------------------------------------
நன்றி மறவாப் பண்பே உயர்வை அளிக்கும்!
----------------------------------------------------------------
மற்றவ ருக்கு உதவாமல்
மற்றவர் நமக்கு உதவிசெய்தால்
அந்த உதவிக் கீடாக
ஈரே ழுலகும் ஆகாது!
தேவை யான நேரத்தில்
செய்யும் உதவி சிறிதெனினும்
உலகைக் காட்டிலும் பெரிதாகும்!
எதிர்பார்ப் பின்றி உதவுங்கள்!
கடலைக் காட்டிலும் பெரிதாகும்!
தினையின் அளவே உதவிகளைச்
செய்த போதும் அதன்பயனைப்
பனையள வாகப் போற்றுவார்கள்!
உதவிக் குள்ள சிறப்பெல்லாம்
பெறுவோர் பண்பின் அளவாகும்!
மாசே இல்லா நட்பினையும்
இன்னலில் துணையாய் இருந்தோரையும்
என்றும் மறக்கக் கூடாது!
எத்தனைப் பிறவி எடுத்தாலும்
சான்றோர் மறக்க மாட்டார்கள்!
நன்மையை என்றும் மறக்காதே!
தீமையை உடனே மறந்துவிடு!
முன்னர் செய்த நன்மையை
மனதில் நாளும் நினைத்தேதான்
பின்னர் செய்த துன்பத்தை
உடனே மறப்பது பண்பாகும்!

0 Comments:
Post a Comment
<< Home