Wednesday, March 25, 2026

நடுவுநிலைமை-12

 நடுவுநிலைமை -- 12

--------------------------------------------------------------

நடுநிலையே சிறந்த அறமாகும்

------------------------------------------------------------

நீதி என்றும் வழுவாமல்

நடுநிலை காப்பதே அறமாகும்!


இப்படி உள்ளவர் செல்வங்கள்

பரம்பரைக் கெல்லாம் உதவிடுமே!


நடுநிலை தவறும் பண்பாலே

மலைபோல் செல்வம் குவிந்தாலும்

அற்பம் என்றே ஒதுக்கிவிடு!


நடுநிலை போற்றிய பண்பாளன்

என்பதைப் புகழும், பழியுந்தான்

உலகில் காட்டும் அளவுகளாம்!


வறுமையும் வளமும் அணியல்ல!

நடுநிலை சான்றோர் அணியாகும்!


நடுநிலை விட்டே தவறிவிட்டால்

கெடுநிலை அவனை அழித்திடுமே!


நீதி மானின் வறுமையினை

பெருமை என்பார் சான்றோர்கள்!


சாயா துலாக்கோல் போலத்தான்

நடுநிலை கொண்டோர் சான்றோராம்!


ஒருதலைத் தீர்ப்பு சொல்லாத

நியாயப் பண்பே நடுநிலையாம்!


நுகர்வோர் நிலையில் தான்நின்று

வணிகம் செய்தல் வணிகருக்கு

சிறப்பைக் கொடுக்கும் ஒழுங்காகும்!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home