Monday, April 22, 2024

தனிமை

நண்பர் தென்காசி கிருஷ்ணன் கைவண்ணம்

 வாழ்வே தனிமைதான்!


வானொலி வந்தது! கேட்டு மகிழ்ந்திருந்தோம்!

வானொலி சென்று தொலைக்காட்சி வந்தது!

காணக் கிடைக்காத காட்சிகளைக் கண்டிருந்தோம்!

வாழ்க்கைப் பரபரப்பில் கைபேசி வந்தது!

ஆள்களின் கைகளில் கைபேசி! மூழ்கிவிட்டோம்!

ஆளுக் கொருமூலை நின்றேதான் பேசுகின்றோம்!

வீட்டில் இருந்தாலும் கைபேசி கையுமாய்

பாட்டிமுதல் இங்கே குழந்தைவரை இன்றிங்கே

வாழ்வே தனிமைதான் பார்.


மதுரை பாபாராஜ்

KRS KARAIKUDI:

தனிமையில் இனிமை காண முடியுமா என்ற கேள்விக்கு பதில் கை பேசி

நண்பர் இசக்கிராஜன் திருச்சி

கைபேசியும் போய் முகம் பார்த்து

வாயால் பேசும் வசந்தநாள் மீண்டும் வந்திடும் பார் ஒரு நாள்.


0 Comments:

Post a Comment

<< Home