Wednesday, January 16, 2008

சமத்துவப் பொங்கல்

கழனிகளில் நல்லுழைப்பைச் சிந்தும் உழவர்
தரணியில் சாதிமதம் பார்த்தா -- சுழன்றே
உழைக்கின்றார்!இங்கே கழனிகளும் நல்ல
விளைச்சலைப் பொழிகிறது?சொல்

எங்கிருந்த போதும் உலகமக்கள் வாழ்வதற்கு
தங்குதடை இன்றியே இன்னுயிரை--என்றென்றும்
காக்கும் உழவருக்கு நன்றிகூறும் உள்மனத்தைக்
காட்டுவதே இப்பொங்கல் நாள்.

சாதிமதப் பேதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு
மேதினியில் எல்லோரும் ஒன்றென்று--நீதிக்குத்
தூதுவிடும் பொங்கல் சமத்துவப் பொங்கலை
வீடுதோறும் கொண்டாடக் கூடு.

0 Comments:

Post a Comment

<< Home