Monday, January 14, 2008

உலக வாழ்க்கை!

அமைதியாகத் தோன்றுகின்ற இந்த உலகம்
சுமைகளை இல்லங்கள் தோறும்-- சுமைதாங்கிக்
கற்களாக உள்ளத்தை மாற்றிச் சுமக்கவைத்தே
பற்றற்று வாழவைக்கும் பார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கவலைகள்
கவ்வித்தான்,பூனை எலிதன்னைக் -- கவ்விப்
பிடித்தேதான் விட்டுக் குதறுதல்போல் நாளும்
துடிக்கவைத்துப் பார்க்கிறதே கூறு.

0 Comments:

Post a Comment

<< Home