Wednesday, June 02, 2010

வளைவதற்குக் கற்றுக்கொள்

==============================
தந்தைக்கோ தாய்க்கோ உடல்நலம் பாதித்தால்
இன்றைய சூழ்நிலையில் வேலையை விட்டுவிட்டு
தொண்டுசெய்ய கூடவே நிற்பதற்கு வாய்ப்பில்லை!
அன்பில்லை என்றா பொருள்?

இருவரும் வேலைக்குப் போகும் கோலம்!
ஒருநாள் விடுப்பும் கிடைக்காத சோகம்!
பரபரப்பு வாழ்க்கை! குழந்தைக்குக் கூட
அரவணைப்பு கானல்தான் பார்.

குடும்ப நிகழ்ச்சிக்குப் போவதற்கும் நேரம்
ஒதுக்க முடியாத காலகட்டம்!பாவம்!
உறவினர் யார்யார்? குழந்தை விழிக்கும்!
கதவுகளை மூடியது யார்?

கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்ட
காட்டுச் சமுதாயப் போக்கில் நடைபோட்டு
வேற்றுமைக்குள் வேற்றுமையை நாற்றுநடும் உள்ளங்கள்!
ஆத்திரமும் வன்பகையும் சொத்து.

குழந்தைகள் எல்லாம் கவனிப்பார் இன்றி
வளர்கின்ற காலமிது! பெற்றோரும் இந்த
வளையத்தில் வாழ்கின்றார்! மாற்றத்தை ஏற்று
வளைவதற்குக் கற்கவேண்டும் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home