Sunday, January 29, 2012

கவிதைச் சரம்

இருப்பே முதுமையில் இமை! ================================ 
அருகில் இருக்கின்றாய் என்ற உணர்வும் இருப்பின் மகிழ்வில் திளைக்கும் மனமும் தருவாய்த் தழைத்துவந்த இல்லற மாண்பின் அருமை உயிர்நாடி பார். ================================================ இதுதான் திருப்தி! ================= 
முயற்சிகள் வேண்டும்! முயன்றதெல்லாம் இந்த 
உலகில் கிடைக்கவேண்டும் என்றெண்ண வேண்டாம்! 
வரவுகள் வந்தால் கிடைத்ததை வைத்தே திருப்தியுடன் வாழ்தல் சிறப்பு. ================================================= இயற்கை அழகு! ================= 
இயற்கை அழகை மெருகூட்டிப் பார்க்க செயற்கை நிறப்பொருளைப் பூசுகின்றார் நாளும்! 
செயற்கை அழகோ அழகல்ல! உன்றன் இயற்கை அழகே அழகு. =====================================================

0 Comments:

Post a Comment

<< Home