Tuesday, September 09, 2014

   இன்று  உலக எழுத்தறிவு நாள்

                08.09.2014
------------------------------------------------------------------------
கற்பதை இங்கே தெளிவாகக் கற்றேதான்
கற்றதை வாழ்வில் கடைப்பிடிப்போம்--நற்றமிழே
இன்று உலக எழுத்தறிவு நாளாகும்!
நன்றியுடன் எண்ணி வணங்கு.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மகாகவி பாரதியார் நினைவு நாள்
    11.09.2014
--------------------------------------------------------------
முண்டாசு பாரதி மூச்சுக்கு மூச்சிங்கே
இந்தியாவை நேசித்தான்! இந்தியரை நேசித்தான்!
வந்தேறிக் கூட்டத்தைப் பாட்டாலே சாடினான்!
வண்டமிழால் எண்ணி வணங்கு.
இசையே உயிர்
------------------
பாடலின் சொற்கள் உயிரோட்டம் பெற்றேதான்
நாடறிய மக்களின் நாவில் அரங்கேறும்
தாகத்தை இங்கே இசைதான் கொணர்கிறது!
பாடல் உயிர்ப்பே இசை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தலையீடு!
--------------------------
வேடிக்கை பார்க்கும் நிலையெடுத்தால் நிம்மதிதான்!
ஓடிஓடி மூக்கை நுழைத்தால்
அவமதிப்பார்!
நாடிவந்து கேட்டால் அறிவுரை சொல்லலாம்!
தேடி அலைதல் இழிவு.

தனிமனித ஒழுக்கம்
-------------------------------------
பிள்ளைகள் பண்பகமாய் வாழ்வில் அமைந்துவிட்டால்
இல்லறத்தில் கற்பூர வாசனை தேடிவரும்!
தொல்லையாய் ஏறுமாறாய் மாறிவிட்டால் புல்பூண்டும்
எள்ளி நகையாடும் பார்.


0 Comments:

Post a Comment

<< Home