Thursday, January 29, 2015

மாயை!
------------
படித்து முடித்து பணியில் நிலைத்து
மதித்தெளிவு பெற்றபின் காதல் வலையில்
பிடிபட்டால் உண்மையான அன்பிலே ஒன்றிக்
கடிமணம் ஏற்கலாம் இங்கு.

படிக்கும் பொழுதே இனக்கவர்ச்சி மாயைப்
பிடியிலே சிக்கினால் நாளும் பொழுதும்
படிப்பும் விரயமாகும்! தத்தளிக்க வைக்கும்!
எதிர்காலம் கேள்விக் குறி!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home